Posts

Showing posts from December, 2022

பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகை செய்தி...

Image
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் அவர்களின் பத்திரிகை செய்தி குறிப்பு  இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திரு இரா.தாஸ் அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் " சம வேலைக்கு சம ஊதியம் என்னும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல், DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய முரண்பாடு மிகப்பெரிய அநீதி என்றும், இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்றும் நீண்ட நாட்களாகவே அரசை வலியுறுத்தி வருகிறோம். ஜாக்டோ ஜியோ விலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். எனவே இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை போக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக கோரிக்கையை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக ...

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Image
 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 26/12/2022 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.  தமிழக ஆரம்பப்பளளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய இரா.தாஸ் மற்றும் ஜே.காந்திராஜ் ஆ.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்க்கண்ட முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன. பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி,சரண்டர் உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.  தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு,அங்கன்வாடி,MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோரு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 05/01/23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதார கோரிக்க...