வானில் இருந்து பூ மழை. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டக் கட்டட திறப்புவிழா காண உள்ளது அந்த நாளில் இயக்க நிறுவனர் மாவீரன் ச.அப்துல் மஜீத் அவர்கள் வானில் இருந்து பூ மழை பொழிவார்கள். நவம்பர் 03-11-2024 விழுப்புரம் நகரம் தேர்திரு விழாவைப் போல எங்கு பார்த்தாலும் ஆசிரியர் கூட்டமாக காணும் வகையில் கட்டடத் திறப்பு விழாவை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றில் மணி மகுடத்தில் பதிக்கு மேலும் ஒரு வைரமாக கட்டடம் மிளிரப் போகிறது. இதற்குக் காரண மானவர்கள் இயக்கத்தின் மீது மாறா பற்று கொண்ட இயக்க கண்மணிகள் என்று எண்ணும் போது உள்ளம் மகிழ்கிறது, வானத்தின் நட்சத்திரங்களை எட்டி தொட்டுவிட்ட உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுவதில் வியப்பில்லை. கட்டடத்திற் காக வாரிக் கொடுத்த வள்ளல்களை எத்தனை பாராட்டினாலும் தகும், இதோ நான் தருகிறேன் நான் ஆசிரியராக இருந்ததற்கு அடையாளமாக தருகிறேன் என்று அள்ளிக் கொடுத்து, இதற்காக அல்லும் பகலும் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்நாளில் நன்றிகள் பலப்பல. இயக்க நிறுவனர் வாங்கிக் கொடுத்த இடத்தில் மாபெரும் ச.அப்துல் ம...
பதவி உயர்வில் பணி மூப்பு முறையையே பின்பற்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும் --- மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் நமது பொதுச்செயலாளர் கோரிக்கை... இன்று 19-05-23 காலை மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி அயல்நாடு கல்வி சுற்றுலா சென்றுவந்ததை பாராட்டி வாழ்த்து தெரிவித்து அகவிலைப்படி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பொதுச் செயலாளர் அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். மேலும் கோரிக்கை மனு அளித்து பொதுச் செயலாளர் அவர்கள் நடை பெறும் கலந்தாய்வில் பழையபடி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் நடைபெற நீதிமன்றத்தில் உரியவழியில் முயன்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்,மேலும் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாய் ஒன்றியத்திற்கு ஈர்க்கு வகையில் கலந்தாய்வில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்,(உதாரணமாக சங்கராபுரம் ஒன்றியம் )மேலும் தெலுங்கு மொழி ஆசிரியர்களின் தலைமை ஆசிரியர் பதவ...
Comments