Posts

Showing posts from April, 2023

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் முதல்கட்ட வெற்றி... தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

Image
  பழைய ஓய்வூதியத் திட்டம்,பணிப்பாதுகாப்பு, சரண்டர், ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறது இவற்றின் தொடர்ச்சியாக இதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நிகழ்வாக கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்து அதற்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.       இதன் காரணமாக தமிழக அரசு அமைச்சர்கள் குழு ஜாக்டோ ஜியோ உடன் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது.  நமது பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர்கள்,  இன்று காலை 10:30 மணி அளவில் திரு எ.வ. வேலு, திரு தங்கம் தென்னரசு, திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அடங்கிய ஆகியோர் அடங்கிய அமைச்சர்களுக்கு குழு உடன்  தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

கோட்டை முற்றுகை போராட்டம் ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டம்

Image
  அடுத்த கட்ட போராட்ட நிகழ்வான கோட்டை முற்றுகை போராட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து கோரிக்கைகளை வென்றெடுக்க ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நமது பொதுச் செயலாளர் ஆசிரியர்களின் விடிவெள்ளி திரு இரா.தாஸ் அவர்கள் போராட்டத்தின் வீச்சு எவ்வாறு இருக்க வேண்டும், அதற்கான நமது நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என கலந்துரையாடினார்.

இயக்க நிறுவனரின் நினைவு நாள் பொதுச்செயலாளர் புகழ் அஞ்சலி

Image
 தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இயக்க நிறுவனர்,ஆசிரியர் இனக்காவலர் அண்ணன் ச.அப்துல்மஜீத் அவர்களின் 8 ம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் பொன்செய் அரசு உதவிப்பெறும் நடுநிலைப்பள்ளியில் மாநில பொதுச்செயலாளர் மாவீரன் அண்ணன் இரா.தாஸ்,மாநிலத்தலைவர் அண்ணன் ஆ.இலட்சுமிபதி,மாநில துணைப்பொதுச்செயலாளர் அண்ணன் முருகன் மற்றும் செம்பொன் வட்டாரப்பொறுப்பாளர்கள்,மாவட்ட, மாநிலப்பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு ஆசிரியர் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர் இனக்காவலர் அண்ணன் ச.அப்துல்மஜீத் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.

ஜாக்டோ ஜியோ போராட்ட முன்மொழிவு - பொதுச்செயலாளர் வீர உரை

Image
  நேற்று காலை திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக மாலை நமது பொதுச்செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ  அடுத்த கட்ட போராட்ட முன்மொழிவினை நமது பொதுச் செயலாளர் இரா தாஸ் அவர்கள் சமர்ப்பித்து வீர உரை ஆற்றினார்.

கொள்ளிடத்தில்‌ தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்‌ கூட்டணி சார்பில்‌ இயக்கக் கொடியேற்றும்‌ நிகழ்ச்சி

Image
  மயிலாடுதுறை மாவட்‌டம்‌, கொள்ளிடத்தில்‌ தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின்‌ சார்பில்‌ இயக்ககொடியேற்று விழாவும்‌, ஆசிரியர்களுக்கு பணி நிறைவுபாராட்டு விழாவும்‌ நடைபெற்றது. விழாவிற்கு வட்டார தலைவர்‌ சிங்காரவேலு தலைமை வகித்தார்‌. வட்டார செயலாளர்‌ சங்‌கர்‌ வரவேற்றார்‌. மாநில துணைப்‌ பொதுச்‌ செயலாளர்‌ கமலநாதன்‌, மாவட்டச்செயலாளர்‌ சண்முகசுந்தரம்‌, மாநில துணைத்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாவட்ட மகளிரணி செயலாளர்‌ கலைச்செல்வி, ஒன்றிய மகளிரணி செயலாளர்‌ சுமதி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. மாநில செயற்‌குழு உறுப்பினர்‌ கண்ணன்‌ ஆண்டறிக்கை வாசித்தார்‌. மாநிலத்‌ தலைவர்‌ திரு.லட்சுமிபதி, மாநில பொருளாளர்‌ திரு தியாகராஜன்‌, கொள்ளிடம்‌ ஒன்றியகுழு தலைவர்‌ திரு.ஜெயபிரகாஷ்‌, திமுக ஒன்றிய செயலாளர்‌ திரு.ரவிக்‌குமார்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்‌. மாநில பொதுச்செயலாளர் திரு.இரா.தாஸ்‌ அவர்கள் கலந்துகொண்டு இயக்க கொடியை ஏற்றி வைத்து பேசுகையில்‌, பழைய ஓய்வூதிய திட்‌டத்தை அமல்படுத்த வேண்டும்‌. காலியாக உள்ள அரசு ஊழியர்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ பணியிடங்களைஉடனடியாக நிரப்ப வேண்‌டும்‌. அவுட்சோர்ஸ்‌சிங்‌ மு...

ஆசிரியர் இனக்காவலர் மாவீரன் அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...

Image
 நமது இயக்க நிறுவனரும், சமரசமற்ற போராளியுமான அண்ணன் மாவீரன் ச.அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் நினைவு நாளை ஒட்டி நமது பொதுச்செயலாளர் இரா.தாஸ் அவர்களின் புகழ் அஞ்சலி....

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்

Image
 *இன்று ( 02.04.23 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்ட குழு கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என முடிவாற்றப்பட்டது.* *1. நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிரந்தர அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வாங்குகிறார்கள் என்று சொல்லி அவுட்சோர்சிங் நியமனங்களை முன்னெடுப்பதற்கான முன் மொழிவுகளை தமிழக முதலமைச்சரை வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதை கண்டித்து கண்டன தீர்மானம் ஏகமனதாக இயற்றப்பட்டது.* *2. எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை கூட்டி ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவது ...