Posts

இன்றைய தேர்வு முறை - ஜெ .ஜெயதுரை

ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும்! “வள்ளுவரும் மாணவராய் ஆனார். திருக்குறளில் தேர்வெழுதப் போனார் முடிவு வெளியாச்சு...அந்தோ ஃபெயிலாச்சு…ப...

டிட்டோஜாக் வேலூர் மாவட்ட ஆயத்த கூட்டம்

Image
வருகின்ற  6-ந்தேதி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்த தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் (டிட்டோஜேக்) வேலூர் ஆசிரியர் இல்லத்தில் மாநில உயர்மட்ட பொதுக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொருளாளருமாகிய அமிர்தலிங்கம் தலைமையில் நடந்தது. மாநில டிட்டோஜேக் உயர்மட்ட குழுவின் முடிவின் படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களிலும் உள்ள டிட்டோஜேக் அமைப்புடன் இணைந்துள்ள 6 சங்கங்களை சேர்ந்த ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் வருகிற 6–ந்தேதி அன்று நடைபெறும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க செல்வது 6–ந்தேதி காலை 11 மணி அளவில் தங்கள் சார்ந்த தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, அன்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில்  வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது, பள்ளியில் பணிபுரியம் அனைத்து ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்யும் போது தலைமை ஆசிரியர் பள்ளியின் பொறுப்பை மு...

இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியர்களாக்காதே

Image
2800 தர ஊதியத்தில் உள்ள சகோதர, சகோதரிகளே...... இதுவரை நொண்டச்சாக்கு சொல்லி நொண்டியடித்தது போதும்.. போராட்டக்களத்தில் தங்களின் பங்களிப்பு என்னவோ இதுநாள்வரை சொற்பமான அளவாகவே உள்ளது.. துளியும் பாதிப்பு இல்லாத மூத்த ஆசிரியர்களே பெருமளவில் களம் காண்கின்றனர். அழுதாலும் அவள் தான் பிள்ளை பெறவேண்டும் என்பதை மறந்தீர்களோ..? எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் பயனை மட்டும் எதிர்பார்த்தால், அது எந்தவகையிலாவது பயனளிக்குமா.? அகல பாதாளத்தின் விளிம்பில் நிற்பதை நீ இன்னுமா உணரவில்லை..? தரம் தாழ்ந்து போன உன் தரஊதியத்தை இன்று நீ மீட்டெடுக்காவிடில் நாளை 7-வது ஊதியக்குழுவில் தரங்கெட்டுப்போய்விடுவாய்.. முடங்கிக் கிடந்தது போதும் முண்டியடித்து போராட்டக் களத்திற்கு வா..

ஆசிரிய இனமே ஆர்த்தெழு.......ஆர்ப்பரி ...உரிமைகளை வென்றெடு ...

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் 6ம் தேதி மீண்டும் ஸ்டிரைக்மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 6ம் தேதி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 1 லட்சம் பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 26, 27 தேதிகளில் போராட்டம் நடந்த நிலையில் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் காரணமாக அன்று பள்ளிகளை மூடக்கூடாது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை தொடக்க கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் உத்தரவு:தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) மார்ச் 6ம் தேதி அன்று நடத்த உள்ள அடையாள வேலைநிறுத்தத்தின் காரணமாக எந்த பள்ளிகளும் மூடப்படக்கூடாது. மாற்று பணியில் மற்ற பள்ளிகளில் இருந்தும், வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களை கொண்டும் எழுத்து பூர்வமாக ஆணை அளித்து ஆசி...

புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்

நாடு முழுவதும் 54 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். நாட்டின் 17 மாநிலங்களில் சேர்த்து, மொத்தமாக 24 மத்தியப் பல்கலைகள் திறக்கப்படவுள்ளன. பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி, புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறப்பதற்கான ஒப்புதலை வழங்கியது. மொத்தம் 17 மாநிலங்களின் 53 மாவட்டங்களில் 54 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இப்பள்ளிகளைத் திறப்பதற்கு மொத்த மதிப்பீடாக ரூ.920 கோடி திட்டமிடப்பட்டுள்ளது.கட்டுமானம், உபகரணங்கள் மற்றும் அறைகலன்கள் ஆகியவற்றுக்கான செலவு ரூ.790 கோடியாகவும், ஊதியம், உதவித்தொகை மற்றும் இதர செலவுகளுக்கான தொகை ரூ.130 கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முழுஅளவில் செயல்பட துவங்கும்போது, அதன்மூலம் ஏறக்குறைய 54,000 மாணவர்கள் பயன் பெறுவார்கள். தற்போது நாட்டில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.தற்போதைய நிலையில், 1094 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.அவற்றில், மாஸ்கோ, காத்மண்டு மற்றும் டெஹ்ரான் ஆகிய இடங்களில் இயங்கும் பள்ளிகளும் அடக்கம்.அடிக்க...

டிட்டோஜாக் -பள்ளிக்கல்வி செயலர் சந்திப்பு

Image
         டிட்டோஜாக் - பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை முடிவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த நிலைபாடு விரைவில் அறிவிப்பு            டிட்டோஜாக் தலைவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருடனான பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு கோரிக்கைக்கும் தனித்தனியாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. ஆயினும் நிதிச் சார்ந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.            பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பிரச்சனைகள் எனில் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதாகவும், நிதிச்சார்ந்த தீர்வுகள் உடனடியாக தீர்க்க இயலாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையகத்தில் கூடி விவாதிக்கின்றனர். அடுத்தக்கட்ட முடிவு குறித்து விரைவில் வெளியிட...

நாளை டிட்டோஜாக் -கல்வித்துறை செயலாளர் சந்திப்பு

               இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை இன்று காலையில் முடிந்த நிலையில் மாலையில் டிட்டோஜாக் கூட்டம் "அப்துல் மஜீத் மாளிகை "யில் நடைப்பெற்றது . தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின். பொதுச்செயலாளர் திரு.தாஸ் மற்றும் தோழமை சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நாளை காலை 11.00 மணியளவில் தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலாளரை சந்தித்து நமது கோரிக்கைகளை எடுத்துரைப்பதென முடிவு செய்யப்பட்டது .   இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் 1.24.02.14 ல் வட்டார மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு கூட்டம் 2. 25.02.14 - 28.02.14 ல் ஆசிரியர் சந்திப்பு இயக்கம் 3.02.03.14 ல் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் 4. 03.03.14 ல் டிட்டோஜாக் உயர்மட்ட கூட்டம் ஆகிய நிகழ்வுகளை நடத்திட முடிவு செய்யப்பட்டது.  மேலும் டிட்டோஜாக் கூட்ட்மைப்பில். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கேற்க விரும்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது .