Posts

ஜாக்டோ ஜியோ தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு....

Image
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் (தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின்) சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி... நமது தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீழ்கண்ட மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள் (1) திருவள்ளூர் (2) இராணிப்பேட்டை (3) திருப்பத்தூர் (4)கடலூர் (5) விழுப்புரம் (6) கள்ளக்குறிச்சி  (7) நாகப்பட்டினம் (8) மயிலாடுதுரை (9) பெரம்பலூர்  (10) தர்மபுரி (11) மதுரை (12) கன்னியாகுமரி இவண்.. திரு. ஆ.இலட்சுமிபதி  மாநில தலைவர்  திருமிகு. இரா.தாஸ்  பொதுச் செயலாளர் திரு. பி.தியாகராஜன்  மாநில பொருளாளர்  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  ச.அப்துல் மஜீத் மாளிகை,  சென்னை-5.

தமிழ்வழிக் கல்வி - பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகைச் செய்தி

Image
 

மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் பொதுச்செயலாளர் சந்திப்பு

  12-01-23 காலை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களிடம் ஆசிரியர்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்  பற்றி பொதுச் செயலாளர் அவர்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறினார்கள்.

அகவிலைப்படி உயர்வுக்கு நன்றி... முதலமைச்சர் அவர்களுக்கு பொதுச்செயலர் நன்றி....

Image
 இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நமது பொதுச்செயலாளர் திரு. இரா.தாஸ் அவர்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதோடு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.   மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், அகவிலைப்படி நிலுவை,சரண்டர்,ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அப்போது மாண்புமிகு முதல்வர் அவர்கள் விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக நமது பொதுச்செயலாளர் அவர்களிடம் உறுதி அளித்தார்.

பொதுச்செயலாளர் அவர்களின் பத்திரிகை செய்தி...

Image
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் அவர்களின் பத்திரிகை செய்தி குறிப்பு  இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசு பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய திரு இரா.தாஸ் அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் " சம வேலைக்கு சம ஊதியம் என்னும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல், DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்த ஊதிய முரண்பாடு மிகப்பெரிய அநீதி என்றும், இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்றும் நீண்ட நாட்களாகவே அரசை வலியுறுத்தி வருகிறோம். ஜாக்டோ ஜியோ விலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். எனவே இடைநிலை ஆசிரியர்களின் இந்த ஊதிய முரண்பாட்டை போக்கிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் உடனடியாக கோரிக்கையை பரிசீலித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக ...

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

Image
 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 26/12/2022 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.  தமிழக ஆரம்பப்பளளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளரும் ஆகிய இரா.தாஸ் மற்றும் ஜே.காந்திராஜ் ஆ.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்க்கண்ட முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன. பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி,சரண்டர் உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.  தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சத்துணவு,அங்கன்வாடி,MRB செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்டோரு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 05/01/23 அன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதார கோரிக்க...

ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை

  நன்றி மறப்பது நன்றன்று இன்று 07-02-2022 மதியம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மதிப்புமிகு பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களை சந்திக்க 3.30 மணி அளவில் அலுவலகம் சென்றோம், பார்வையாளர்கள் அறையில் அமர்ந்து இருந்தோம் சந்திக்கின்ற நேரம் நெருங்கும் வேளை, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்திற்கு மதிப்புமிகு ஆணையாளர் அவர்கள் செல்லவேண்டிய நிலையில், கூட்டம் முடிந்து வரும் வரை காத்திருந்தோம். ஏழு மணி அளவில் ஆணையாளர் அவர்கள் மீண்டும் அலுவலகம் வருகை தந்தார்கள்.அச்சமயம் நேரில் சந்தித்த நிகழ்வு. 1.முதலில் LKG, UKG க்கு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய பணிநிலைக்கே மாறுதல் பெற தொடர்ந்து நாம் வலியுறுத்தியதின் அடிப்படையில்,மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், பள்ளிக் கல்வி ஆணையாளர் அவர்களின் அறிவுரத்தலின்படி மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்  உரிய ஆணை வெளியிட்டதற்கு ஆணையாளர் அவர்களிடம் இடைநிலை ஆசிரியர்களின் கெளரவத்தை பாதுகாத்ததற்காக இயக்கத்தின் சார்பில் நமது பொதுச் செயலாளர் அவர்கள் நன்றியை தெரிவி...