Posts

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு பொதுச்செயலர் அஞ்சலி

Image
   இன்று 21-05-23 காலை  இயக்கத்தின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் ஸ்ரீ பெரும்புதூர் சென்று பஞ்சாயத் ராஜ் சட்டத்தின் பிதாமகன், அன்னை இந்திரா காந்தியில் தவப்புதல்வர்,   இந்தியாவின் சிற்பி பண்டித ஜவகர்லால் நேருவின் பெயரன் ஆகிய சிறப்புகளை கொண்ட முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளில் நினைவு அஞ்சலி செலுத்திய நிகழ்வு.   நிகழ்வில் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்   அழகிரியை சந்தித்து நலம் விசாரித்த நிகழ்வு   பாராட்டுக்குரியது .  பொதுச்  செயலாளருக்கு இயக்கத்தின் சார்பில் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.   ஆ.இலட்சுமிபதி  மாநிலத் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

நமது பொதுச்செயலாளர் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் சந்திப்பு....

Image
   பதவி உயர்வில் பணி மூப்பு முறையையே பின்பற்ற கொள்கை முடிவு எடுக்க வேண்டும் --- மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் நமது பொதுச்செயலாளர் கோரிக்கை... இன்று 19-05-23 காலை மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி அயல்நாடு கல்வி சுற்றுலா சென்றுவந்ததை பாராட்டி வாழ்த்து தெரிவித்து அகவிலைப்படி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த பொதுச் செயலாளர் அவர்கள் மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.  மேலும் கோரிக்கை மனு அளித்து பொதுச் செயலாளர் அவர்கள் நடை பெறும் கலந்தாய்வில் பழையபடி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் நடைபெற நீதிமன்றத்தில் உரியவழியில் முயன்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும்,மேலும் புதியதாக பிரிக்கப்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாய் ஒன்றியத்திற்கு ஈர்க்கு வகையில் கலந்தாய்வில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும்,(உதாரணமாக சங்கராபுரம் ஒன்றியம் )மேலும் தெலுங்கு மொழி ஆசிரியர்களின் தலைமை ஆசிரியர் பதவ...

நமது பொதுச்செயலாளர் - தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சந்திப்பு...

Image
                 இன்று 19-05-23 காலை கோட்டையில் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைமகன் மதிப்புமிகு தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு அவர்களை  தமிழகத்தின் தலைசிறந்த இயக்க வாதியும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளருமான இரா.தாஸ் அவர்கள் சந்தித்து தமிழ் வணக்கத்தை பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டபோது பொதுச் செயலாளர் அவர்கள் கிடைத்த ஒரு நிமிட நேரத்தில் தலைமைச் செயலாளர் அவர்களை பல  ஆண்டு பின்னோக்கிய சிந்தனையை தூண்டி காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றிய போது  நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந் தார்கள். மதிப்புமிகு இறையன்பு அவர்கள் மகிழ்ந்து மனம்விட்டு சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தினார்கள். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களை பெரிதும் விரும்புகிறார்கள் ஆசிரியர் அரசு ஊழியர்சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி விடைபெற்றார்கள்.

முதல்வருக்கு நன்றி.... பத்திரிகை செய்தி

Image
  தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக அரசு கூட்டணியின் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் மாநில தலைவர் திரு ஆ.இலட்சுமிபதி  மற்றும் நிர்வாகிகள் அன்பழகன்,புருஷோத்தமன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது குறித்த பத்திரிகை செய்தியை மாலை முரசு நிறுவனம் வெளியிட்டமைக்கு நன்றி.... செய்தியின் முழு விவரத்தையும் அறிய  

மாண்புமிகு தமிழக முதல்வருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு...

Image
          இன்று 18-05-23 காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் தலைமையில் கோட்டையில் சந்தித்து அகவிலைப்படி உயர்வு வழங்கியதற்கு நன்றியும், பழையபடி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டு, நிறுத்தி வைத்துள்ள ஊக்க ஊதிய உயர்வு,சரண்டர் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இயக்க பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுமையாக கேட்டதுடன் ஆவண செய்வதாக கூறினார்கள்.உடன் மாநிலத் தலைவர் இலட்சுமிபதி திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அன்பழகன்,மாநில துணைப் பொதுச் செயலாளர் புருஷோத்தமன் உடன் இருந்தனர். மாலை மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்களை சந்தித்து பேச இயக்குனரகம் சென்ற நிலையில் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் க.அறிவொளி அவர்கள் மதுரையில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் இருப்பதாக அறிந்த நிலையில் பொதுச் செயலாளர் அவர்கள் தொலைபேசியில் மதிப்புமிகு...

மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் வரும் வாய்ப்பு....

  எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே ! எத்தனை போராட்டம், எத்தனை ஆர்ப்பாட்டம்,மேடை தோறும் பழையபடி பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நமது பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் வலியுறுத்தி பேசி வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவீர்கள். வாழ்வாதார மாநாட்டில் அரசாணை எண் 101, ரத்து செய்யப்பட்டாலும்,மழை நின்றும் தூவானம் விடவில்லை என்பதுபோல அரசாணை 101 ரத்து செய்யப்பட்டும் பழைய நிலை திரும்ப வில்லை, பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடம் எட்டாக் கனியாக இருந்தது. அதிகாரிகள் அத்துமீறல்கள்  அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதனால்தான் கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்த உடன் மூன்று அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தபோது அதிகாரிகள் அத்துமீறல்கள் அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பொதுச் செயலாளர் அவர்கள் செய்தியாளர் கூட்டத்திலும் அதிகாரிகளின் அத்து மீறல்களை சுட்டிக் காட்டினார்கள். பள்ளிக் கல்வி இயக்குநர் வளாகம் பள்ளிக் கல்வி ஆணையர் வளாகமாக மாறியது. இந்த...

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுடன் நமது பொதுச்செயலாளர் சந்திப்பு....

Image
  உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடும்போம் இன்று மக்கள் நாயகன் முன்னாள் பள்ளிக் கல்வி துறை அமைச்சர், இந்நாள் நிதி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளரும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது பொதுச் செயலாளர் அவர்களை அன்புடன்   வரவேற்ற அமைச்சர் அவர்கள் "பள்ளிக் கல்வித் துறை அதில் பணியாற்றும் ஆசிரியர் நலன் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் நலம் முற்றும் அறிந்துள்ளேன். உங்கள் கோரிக்கைகள் அனைத்திற்கும் உரிய நேரத்தில் தீர்வு காணப்படும்" என்று கூறியது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இ ன்றைய சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் நமது இயக்க இதழை பார்த்து ரசித்த அமைச்சர் இது ஒரு வரலாறு என்று பாராட்டினார்கள். உடன் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். - மாந...